இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, November 19, 2014

ஏழ்மை...... கவிதை 02

உள்ளத்து ஆசைகளின் 
உந்துதலின் பாதைகளால் 
உலகத்து ஏழ்மைகள் 
உருவாகிறது உத்தமர்களே....

சமுகத்து விளைவுகளில் 
சரிந்து நிற்கும் பொருளாதாரத்தில் 
சலனமுன் திருப்தியில் கண்டு 
ஏழ்மையெனும் வறுமையில் திண்டாடுகிறாய் 

ஏ..மானிடா உம் உள்ளத்து உலகத்தில் 
வரையறையென்னும் சுவரமைத்துக்கொள் 
நீ ஏழ்மையை உணராய் - உன் 
உயிர் உள்ளவரை.

Monday, November 17, 2014

ஏழ்மை.........!!!


ஏழ்மை கொண்டுணர்ந்து 
தாழ்மையுடன் துவண்டு 
ஏழனச் செம்மலாய் 
மடிந்திடாதே துணிந்து நில் 

ஏழ்மை ஆட்கொண்டால் 
சிறுமை ஆகிடுவாய் 
சீற்றம் வாழ்வில் கொண்டு 
சீரழித்திடும் உன் நிம்மதியை 


ஏழ்மையின் உச்சம் கண்டு 
அச்சத்தில் அழிந்தோருமுண்டு 
ஏழ்மையுன்னுள் எதானாலென்று 
ஆய்ந்துபார் அமைதியடைவாய் 

ஏழ்மையை ஏராக்கி 
கூர்மையை புத்தியில் கொண்டு 
வாழ்கையை உழுதுபார் 
அறுவடையின்லாபம் உனதாகும் 




Related Posts Plugin for WordPress, Blogger...