இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, March 23, 2013

வாழும் வரை போராடு.......


உயிர்பெற்றாய் உருவமானாய் 
உணர்வுபெற்றாய் முழுமையானாய் 
மனிதனாய் மலரந்தாய் 
போராட்ட வாழ்வு பெற்றாய்...

கருவறையில் போராடியதால் 
வென்றுவிட்டாய் இவ்வுலகை 
உலகத்துப் போராட்டத்தில்- நீ 
அடையவிருப்பது கல்லறையை 

மனிதா முன்னும் பின்னும் 
திரும்பிப்பார் உன் நிழல்கூட 
உன்னை போராடத்தூண்டுகிறது 
நீ கண்ணயர்ந்திட்டால் 
கனவினிலும் போராடுவாய் 

அற்பமுன் வாழ்நாள் - அதில் 
போராடிச் சாதித்திருப்பதெதுவோ 
இன்று ஒர் போராட்டம் 
இன்றியமையாதது - அது 
சமூகத்திற்காய் நீ போராடுவது 

Wednesday, March 20, 2013

சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!!



எங்களின் விசங்களின்னும் 
சேகரிக்கப்படுகிறது...........
எம்மைச் சீண்டியும் தீண்டாத 
பொறுமையாளர்களென - இன்றே 
கற்றுக்கொடுக்கிறோம் பாடமவர்களுக்கு 

இதுதான் இஸ்லாமியமென 
வெறுப்பவர்களையும் வியந்திடவும் 
பார்ப்பவர்களைக் கவர்ந்திடவும் 
பக்குவம் காத்திருக்கிறதெம் சமுகம் 

ஆங்காங்கு உசுப்பிவிடப்படும் 
உணர்வுகளுக்கு விலங்கிட்டு 
உள்ளத்தால் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள் 
சந்தர்ப்பம் ஏற்பட்டால் 
துணிந்து சஹீதாவதற்காக......

இறைவனின் மார்கமது இஸ்லாம் 
அவனே காத்திடவல்லவன் 
பொறுமையாளர்களின் அதிபதியவன் 
பொறுமைகொண்டு காத்துநிற்கிறான் 


Wednesday, March 13, 2013

வேரோடு அறுத்திடுவோம்.........


ஹலாலாய் உண்ணக் காபீரிடம் அனுமதி 
கேட்கவேண்டியவர்களாய் நாங்கள் 
ஏக இறைவன் என்றோ எமக்களித்த 
வரயறைகளை மறந்ததால் 
விழைந்த அறுவடைகள் இவை.....

யாவரும் கூக்குரலிட்டனர் 
அனைவரும் அடங்கிவிட்டனர் 
ஹலாலெதுவென்று தேடக் 
கண்ணாடி வேண்டுமெமக்கு......

ஹலாலே இல்லை இனியென்றதும்  
பட்டாசி வெடித்தனராம் அவர்கள் 
எங்களிதயங்களை பத்தவைத்து 
எரிமலைகளாய் ஆக்கிகிறார்கள் 

அன்று... வணங்கிய தளங்கள் 
இன்று.. உண்ணுகின்ற உணவுகள் 
நாளை.... உடுக்கின்ற உடைகளென 
தொடரும் இவர்களின் வேட்டைகளால் 
தொடரவிருப்பதுதான் எதுவோ........???

Saturday, March 9, 2013

எம் தேசத்தை வாழவிடுங்கள்..........!!!!!!



ஆண்டாண்டு காலம் அனுபவித்த
யுத்தமெனும் இருளை நோக்கி
மீண்டும் நடைபோடுகிறதெம் தேசம்

வேண்டாமென்று வெருண்டோடுவோரையும்
வேதனையென்று விலகிநிற்போரையும்
வக்கிரம் செய்து வதைக்கிறார்கள்

அப்பன் அம்மையென்றும்
அக்கே நங்கியென்றும்
அன்னியோன்யம் காத்திருந்த
சமுகமொன்றை சிதைத்து
சுக்குநூறாக்கி சிதறச்சொய்கிறார்கள்

நாடு என்று தன் உயிரிலும் மேலாக
நேசிக்கின்ற சமுகமொன்றை
அன்னியமாய் சித்தரித்து
நாசவலையில் சிக்கிவிடத் துடிக்கிறார்கள்

அன்னிய தேசமெல்லாம் ஒன்றுகூடி
தேசத்தை நாசம் செய்ய விழைந்த போது
இஸ்லாமிய தேசங்கள் திரண்டு
கைகொடுத்த சம்பவங்கள் மறந்து
இஸ்லாமியனுக்கெதிராகவா
அனியாயம் செய்கிறீர்கள்





Related Posts Plugin for WordPress, Blogger...