இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, January 10, 2013

றிசானாவின் மரணம்......



நடந்தேறியதற்குத் தண்டனையடைந்து
புனிதவதியாய் மரணமெய்தினார் றிசானா
வாக்களித்த இறைவன்
சுவனமதை உறுதியாக்கினான்.

விளைநில இவ்வுலகில்
விதைப்பவைகளால் சுவனமெய்துவது
மனிதவாழ்வின் நோக்கமல்லவா
றிசானாவும் வென்றுவிட்டார்
நாட்டமிது இறைவனது
யார் நாடினும் தடுத்திருக்க முடியாதது

இறைவனின் மார்க்கம்
எமக்களித்த கட்டுப்பாட்டை
யார் மீறினும் எமக்கு
தண்டனையுண்டென்பதை மறந்து
எதிர்வாதமிட்டு பாவியாய் நாமாவதா...?

றிசானாவின் மரணம்
ஆயிரமாயிரம் றிசானாக்களின்
வாழ்க்கையை படம்போட்டுக்
காட்டியிருக்கிறது....


Thursday, January 3, 2013

காமவலி தீர்க்கக் கருவி....


தூண்டப்படாத காமம் 
துயில் கொள்ளுமாம் திணறாது 
தீண்டிய காமம்....
தீரும் வரை தாண்டவமாடுமாம் 

மறுக்க முடியா இயற்கையிது 
மனக் கட்டுப்பாட்டின் பயிற்சியில் 
மனிதனாய் நிலைத்திட 
சூழலிங்கு காரணமாகிறது.. 

மறந்துவிட்ட இறைபக்கதியும் 
மழுங்கிவிட்ட புத்தியும் 
மாந்தரென்று மறந்து - காமத்திற்கு
மிருகங்களாய் மாறுமுலகமின்று 

உலகத்து வரலாறு 
கண்டிராத சம்பவங்கள் 
சாதனைகளாய் அரங்கேறி 
சமகாலச் சரித்திரங்களாய் 
எதிர்காலம் நோக்கி பதிவேறுகிறது 

காமத்தின் உரங்களாய் 
தொழில்நுட்ப மாற்றங்களும் 
பாதுகாவலற்ற வளர்ப்புகளும் 
மனஓட்டங்களின் சமநிலையும் 
தனிமையின் வரவேற்புகளுமென 
நிலைத்துவிட்டன....





Related Posts Plugin for WordPress, Blogger...